For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வழக்கு- போலீஸ் வலை: கிருஷ்ணசாமி எஸ்கேப்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கல்குவாரி தொழிலாளர் கொலை வழக்கில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியைக் கைது செய்ய போலீஸார்தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

சென்னை பல்லாவரம் அருகே திரிசூலம் பகுதியில் கல்குவாரி தொழிலாளர்களுக்கும், புதிய தமிழகம் கட்சியைச்சேர்ந்தவர்களுக்கும் இடையே ஏற்பட்ட பெரும் மோதலில் கல்குவாரி தொழிலாளி மாடசாமி என்பவர் படுகொலைசெய்யப்பட்டார்.

இந்தக் கொலை டாக்டர் கிருஷ்ணசாமியின் உத்தரவின் பேரில் தான் நடந்துள்ளதாக கூறி திரிசூலம் பகுதியில் நூற்றுக்கணக்கானகல்குவாரி தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

தொடர்ந்து கொந்தளிப்பாக உள்ளனர். இந்த நிலையில் கொலை வழக்கில் 8வது எதிரியாக கிருஷ்ணசாமியை போலீஸார்சேர்த்துள்ளனர். இதைத் தொடர்ந்து கிருஷ்ணசாமி தலைமறைவாகி விட்டார்.

அவரைக் கைது செய்ய போலீஸார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையே, சென்னைப் புறநகர்நீதிமன்றம் ஏதாவது ஒன்றில் கிருஷ்ணசாமி சரணடையக் கூடும் என்று கிடைத்துள்ள தகவல்களால் தாம்பரம், ஆலந்தூர் உள்ளிட்டபுறநகர் நீதிமன்றங்களில் போலீஸார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X