சிகரெட் தகராறில் ஒரு கொலை: 7 பேருக்கு ஆயுள்
சேலம்:
வாலிபரை சிகரெட் வாங்கி வரக் கூறிய நபரைக் கொலை செய்ததற்காக 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம்தீர்ப்பளித்துள்ளது.
சேலம், அரிசிப்பாளையம் பாவேந்தர் தெருவில் வசித்து வந்தவர் குமாரவேல். இவரது நண்பர் கவுன்சிலர் வெங்கடேசன்.அடிக்கடி அவரைப் பார்ப்பதற்காக வெங்கடேசன் வீட்டுக்கு குமாரவேல் வருவது வழக்கம்.வெங்கடேசன் வசித்து வந்த அதே பகுதியில் அதிமுக பிரமுகர் நடராஜன் என்பவர் குடியிருந்தார். சம்பவ தினத்தன்று,வெங்கடேசன் வீட்டுக்கு குமாரவேல் வந்துள்ளார். அப்போது தெருவில் சென்ற நடராஜனின் தங்கை மகன் விஜய்யை அழைத்துதனக்கு சிகரெட் வாங்கி வருமாறு கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த விஜய், நடராஜனிடம் சென்று இதுகுறித்துக் கூறினார். தங்களது பையனை சிகரெட் வாங்கி வருமாறுகூறுவதா என்று கோபமடைந்த நடராஜன், அவரது மகன் வெங்கேடசன், தங்கை சாந்தி, அவரது கணவர் மாது, அவரது தம்பிகோபால், மாதுவின் மகன்கள் விஜய், பிரபு, நடராஜனின் அக்கா மகன் சேகர் ஆகியோர் திரண்டு சென்று கடந்த 2003ம் ஆண்டுமார்ச் 2ம் தேதி இரவு குமாரவேலை வளைத்துப் பிடித்தனர்.
கொலை வெறியுடன், பயங்கர ஆயுதங்களுடன் நடராஜன் குடும்பம் தன்னை துரத்தியதால் பீதியடைந்த குமாரவேல் உயிரைக்காப்பாற்ற ஓடியுள்ளார். ஆனாலும் அவரை மடக்கிப் பிடித்த நடராஜன் குடும்பத்தினர் சரமாரியாக அவரை வெட்டிக் கொன்றனர்.
இதுதொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மாவட்ட தன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கைவிசாரித்த நீதிபதி முருகானந்தம் புதன்கிழமை தீர்ப்பளித்தார். அதில், குற்றம் சாட்டப்பட்ட 7 பேருக்கும் ஆயுள் தண் டனையும்,தலா ரூ. 1000 அபராதம் வழங்கி தீர்ப்பளித்தார். கோபால் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications