திண்டிவனத்துக்கு கல்தா: கட்டம் கட்டிய காங்
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியையும், காங்கிரஸ் மாநிலத் தலைவர் வாசனையும் விமர்சித்து கட்சி விரோத நடவடிக்கைகளில்ஈடுபட்டு வந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக கட்சிமேலிடம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பாராளுமன்ற தேர்தலில் வட மாவட்டங்களில் காங்கிரஸ்க்கு திமுக தொகுதி ஒதுக்கவில்லை என்றும், வருகிற தேர்தலில்காங்கிரசில் உள்ள வன்னியர்களுக்கு தொகுதிகள் ஒதுக்கித் தர வேண்டும் என்றும் திமுக தலைமையை வற்புறுத்தினார்திண்டிவனம்.மேலும் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு கருணாநிதி சம்மதிக்க வேண்டும் என்றும் கூறினார். பல்வேறு மாவட்டங்களில்ஆதரவாளர்களை திரட்டி ரகசிய கூட்டங்களும் நடத்தி வந்தார். இதனால் திண்டிவனம் ராமமூர்த்தி கூட்டணிக்கு விரோதமாகநடப்பதாக காங்கிரஸ் மேலிடத்துக்கு புகார்கள் அனுப்பப்பட்டன.
இந்த புகார்களை பரிசீலனை செய்த கட்சி மேலிடம் ராமமூர்த்திக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதில் தமிழக காங்கிரசில்பொறுப்புள்ள பதவி வகித்த நீங்கள் கட்சிக்கு விரோதமாக தொடர்ந்து பேசி வருவதை இனியும் அனுமதிக்க முடியாது என்றுகூறியிருந்தது.
கட்சிக்கு விரோதமாக செயல்படும் உங்களை காங்கிரசில் இருந்து ஏன் நீக்கக்கூடாது என்பதற்கு 7 நாட்களில் விளக்கம் அளிக்கவேண்டும் என்றும் கெடு விதித்துள்ளது. இதற்கு பொருத்தமான விளக்கம் வராவிட்டால் கட்சியில் இருந்து நீக்கப்படுவீர்கள்என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த நோட்டீசுக்கு அவர் என்ன பதில் அனுப்பினாலும், அடுத்த வாரத்தில் திண்டிவனம் ராமமூர்த்தி காங்கிரசில் இருந்துநீக்கப்படுவார் என்று தெரிகிறது.