For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஏரி உடைந்து 2,000 வீடுகளில் வெள்ளம்

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி:

திருச்சி அருகே தொட்டியம் ஏரி நிரம்பியிருந்த நிலையில் திடீரென்று கரை உடைப்பு ஏற்பட்டதால், அந்த பகுதியை சுற்றியுள்ள2,000 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

தமிழகத்தில் அடுத்தடுத்து உருவான புயலால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்ததில் திருச்சி, சென்னை, கரூர், கடலூர்உள்பட பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தது. திருச்சியில் காவிரி பாயும் மாவட்டம் என்பதால் பாதிப்பு சற்று அதிகமாகவேஇருந்தது. இந்த வெள்ள அபாயம் கடந்த 4 நாட்களாக சற்று ஓய்ந்திருந்தது.

இந்த நிலையில் தொட்டியம் அருகே எம்.களத்தூர் என்ற இடத்தில் மழையால் நிரம்பியிருந்த ஏரிக்கரை நள்ளிரவு உடைப்புஏற்பட்டு 2,000 வீடுகள் தண்ணீரில் மிதந்து கொண்டிருக்கிறது. இந்த ஏரிக்கரை உடைந்ததால் வெள்ளம் சீறிப்பாய்ந்துஎம்.களத்தூர், பெரியார்நகர், அண்ணாநகர் ஆகிய தாழ்வான பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

இதையடுத்து உடனடியாக தொட்டியம், காட்டுபுத்தூர், முசிறி போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்தனர். வெள்ளம் சூழ்ந்தபகுதிகளில் இருந்து மக்களை பத்திரமாக மீட்டனர். மேலும் 2 பொக்லைன் எந்திரம் மூலம் உடைப்பை அடைக்கும் பணிமுடுக்கிவிடப்பட்டது. இந்த வெள்ளத்தில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X