இனி இரண்டு நிறங்களில் கியாஸ் சிலிண்டர்
டெல்லி:
கேஸ் சிலிண்டர்களில் ஏற்படும் மோசடியை தடுக்க இரண்டு நிறங்களில் சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் என்று மத்தியபெட்ரோலிய துறை அமைச்சர் மணி சங்கர் அய்யர் கூறினார்.
தற்போது வீட்டு உபயோகத்துக்கு தனி கேஸ் சிலிண்டரும், வணிக உபயோகத்துக்கு தனி சிலிண்டரும் தனித்தனி விலையில்விநியோகிக்கப்படுகிறது.இதில் வணிக உபயோக சிலிண்டர்களின் விலையை விட வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலை குறைவாக உள்ளதால் பலர்வணிகத்திற்கு சட்ட விரோதமாக வீட்டு உபயோக சிலிண்டர்களை பயன்படுத்துகிறார்கள். இதனால் சிலிண்டர் தட்டுப்பாடுஏற்படுகிறது.
இதில் நடைபெறும் மோசடியை தடுக்க இந்த சிலிண்டர்களை தனித்தனியே பிரித்து காட்டும் வகையில் அதன் நிறங்களை மாற்றமத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த தகவலை மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் மணிசங்கர் அய்யர் மாநிலங்களவையில்தெரிவித்தார்.
மேலும் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு மட்டும் மானிய விலையில் கேஸ் விநியோகிப்பது குறித்து கருத்துதெரிவிக்குமாறு மாநில அரசுகளிடம் கோரப்பட்டுள்ளது. இதன் மூலம் இரட்டை விலையை அமுல் செய்வது குறித்தும் கருத்துகோரப்பட்டுள்ளது என்று கூறினார்.