வளர்ப்பு மகன் சுதாகரன் கொலை முயற்சி வழக்கு
சென்னை:
கொலை முயற்சி வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவின் மாஜி வளர்ப்பு மகன் சுதாகரன் மீது சென்னை கூடுதல் செஷன்ஸ்நீதிமன்றத்தில் குற்றச் சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன.
சுதாகரனின் பெயரில் சின்ன எம்.ஜி.ஆர். நற்பணி மன்றம் என்ற அமைப்பு நடத்தப்பட்டு வருகிறது.இந்த அமைப்பின் பொதுச் செயலாளராக கோபு ஸ்ரீதர் என்பவர் இருந்து வந்தார். மன்றத்தின் நிதியில் பெரும் முறைகேட்டில்ஈடுபடுவதாக சுதாகரனுக்குத் தகவல் கிடைக்கவே கடந்த 2001ம் ஆண்டு ஜூன் 13ம் தேதி கோபுவை அழைத்து விசாரித்துள்ளார்.
அப்போது கோபமடைந்த சுதாகரன், கோபுவை அடித்துள்ளார். அத்தோடு சுதாகரனின் தந்தை விவேகானந்தன்,எஸ்.ஆர்.பாஸ்கரன், தோட்டம் பாஸ்கரன், மொய்னுதீன், சுரேஷ் ஆகியோரும் சேர்ந்து தாக்கியுள்ளனர். மேலும் துப்பாக்கிமுனையில் கோபுவை, சுதாகரன் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக சுதாகரன் மற்றும் ஐந்து பேர் மீது சென்னை கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்தவழக்கில் வியாழக்கிழமை குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன. வழக்கு விசாரணை பின்னர் 23ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
ஏற்கனவே சுதாகரன் மீது கஞ்சா வழக்கு போடப்பட்டு நிலுவையில் உள்ளது. மேலும் சும்மா திரிந்த சுதாகரனிடம் இன்றுஏகப்பட்ட கோடிகள் குவிந்து கிடக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications