தஞ்சை, திருச்சியில் கன மழை: கிராமங்களில் வெள்ளம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
புயல் சின்னம் காரணமாக காவிரி டெல்டாப் பகுதி மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, நாகை ஆகியமாவட்டங்களில் கன மழை பெய்து இயல்பு வாழ்க்கையை பாதிப்படைய வைத்துள்ளது.
தஞ்சை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு முதலே மழை பெய்து வருகிறது. இதனால் தெருக்கள்,சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது.ஓரத்தநாடு, கண்ணனாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக சமயன்குடி கிராமத்தில் வெள்ள நீர் புகுந்துள்ளது.
இதேபோல புதுக்கோட்டை மாவட்டத்திலும் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. திருவாரூர், திருச்சி ஆகியமாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.
காவிரி டெல்டாவில் அதிகபட்சமாக தஞ்சை, சீர்காழியில் 70 மில்லிமீட்டர், பாபநாசம் 56, ஓரத்தநாடு 53, திருவையாறு 48,பேராவூரணி 40, கும்பகோணம் 35, கொள்ளிடம் 33.5, திருத்துறைப்பூண்டி 30, மயிலாடுதுறை 29, நாகை 26,திருக்காட்டுப்பள்ளி 25, திருவாரூர் 18, கரூர் 18, சின்ன தாராபுரம் 10 மில்லி மீட்டர் என மழை பதிவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications