சொன்னது சொன்னது தான்: அசராத திண்டிவனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுக தலைவர் கருணாநிதியின் விருப்பு, வெறுப்புகளுக்கேற்ப தான் காங்கிரஸ் கட்சியில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றனஎன்ற எனது கருத்தில் எந்தவித மாற்றம் இல்லை என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்திகூறியுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியை சமீப காலமாக திண்டிவனம் ராமமூர்த்தி கடுமையாக விமர்சித்து வருகிறார். கருணாநிதியின்சொல்படிதான் காங்கிரஸ் கட்சியில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுவதாகவும், வன்னிர்யகளை காங்கிரஸ் மேலிடம்கருணாநிதியின் பேச்சைக் கேட்டு புறக்கணிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து திண்டிவனம் ராமமூர்த்தியிடம் விளக்கம் கேட்டு காங்கிரஸ் மேலிடம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்தநிலையில் திமுக தலைவர் குறித்து தான் கூறிய கருத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்று திண்டிவனம் ராமமூர்த்தி மீண்டும்திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், கருணாநிதியின் பேச்சைக் கேட்டுத் தான் தமிழக காங்கிரஸ் விவகாரம் குறித்து கட்சி மேலிடம்முடிவு செய்கிறது. எனது இந்தக் குற்றச்சாட்டில் எந்தவித மாற்றம் இல்லை. அதுதான் உண்மை.

கட்சியின் நலனுக்காகத் தான் நான் எனது கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்து வருகிறேன். காமராஜர் குறித்து நான்புகழ்ச்சியாக கூறினால் அது கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய செயல் என்று காங்கிரஸ் கட்சி கருதுமானால் அதுகுறித்து நான்கூறுவதற்கு ஒன்றும் இல்லை. அது கட்சி விரோத செயலாக எப்படி ஆகும்?

கட்சி மேலிடம் எனக்கு அனுப்பியதாக கூறப்படும் நோட்டீஸ் எனக்கு இதுவரை வரவில்லை. அப்படி வந்தால் அதற்குரியபதிலை நான் அனுப்புவேன். எந்த விளக்கம் கேட்டாலும், எனது கருத்து அப்படியே தான் உள்ளது, அதில் கொஞ்சம் கூட மாற்றம்இல்லை என்று கூறியுள்ளார் திண்டிவனம் ராமமூர்த்தி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+