For Quick Alerts
For Daily Alerts
Just In
உயர்நீதிமன்றம்: 17 புதிய நீதிபதிகள் பதவியேற்பு
சென்னை:
சென்னை உயர்நீதிமன்ற புதிய நீதிபதிகளாக 17 பேர் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சமீபத்தில் 17 புதிய நீதிபதிகளை மத்திய அரசு நியமித்தது. இதைத் தொடர்ந்து 17 பேரும் இன்றுபதவியேற்றுக் கொண்டனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று காலை நடந்த பதவியேற்பு விழாவில் தலைமை நீதிபதி அஜீத்பிரகாஷ் ஷா, 17 பேருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
சம்பத்குமார், ஆறுமுப்பெருமாள் ஆதித்தன், முருகேசன், தமிழ்வாணன், ஜெயபால், மோகன்ராம், ஜோதிமணி, ரகுபதி, சித்ராவெங்கட்ராமன், கே.நஸீருல்லா பாஷா, ஜனார்த்தன ராஜா, பால் வசந்த்குமார், சுகுனா, ஜெயச்சந்திரன், ராஜேஷ்வரன், தனபாலன்,சுதாகர் ஆகியோர் இன்று புதிய நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டனர். புதிய நீதிபதிகள் பதவியேற்பைத் தொடர்ந்து சென்னைஉயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.
Comments
Story first published: Saturday, December 10, 2005, 5:30 [IST]