சென்னை: ஏரி ஆக்கிரமிப்பு அகற்றல் தொடங்கியது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையின் பெரிய ஏரிகளில் ஒன்றான போரூர் ஏரியைச் சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி இன்றுதொடங்கியது.

சென்னைப் புறநகர்களில் உள்ள மிகப் பெரிய ஏரிகளில் ஒன்று போரூர் ஏரி. இந்த ஏரியைச் சுற்றிலும், ஏரிக்குள்ளும் ஏராளமானஆக்கிரமிப்புக் கட்டடங்கள் உள்ளன. இதன் காரணமாக சமீபத்தில் பெய்த கன மழையால் ஏரியில் அதிக அளவில் நீரை சேமிக்கமுடியவில்லை.

மேலும், ஆக்கிரமிப்புகள் காரணமாக, ஏரியிலிருந்து தண்ணீர் வெளியேறும் பகுதிகள் அடைக்கப்பட்டு விட்டதால், தண்ணீர்தாறுமாறாக வெளியேறி நூற்றுக்கணக்கான குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்து பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பெருமளவில்பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து ஏரிகளைச் சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து ஏரியில்ஆக்கிரமிப்பு செய்து வீடு, கடைகளை கட்டியிருந்தவர்கள் காலி செய்யும்படி கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில் இன்று அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியைத் தொடங்கினர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன்புல்டோசர் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றி வருகின்றனர்.

இதேபோல பிற ஏரிகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களும் வெளியேற்றப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+