For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பேச்சுவார்த்தை: நார்வேக்கு புலிகள் கோரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

போரைத் தவிர்க்க உடனடியாக மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யுமாறு நார்வேக்கு விடுதலைப் புலிகள்கோரிக்கை விடுத்துள்ளனர்.

புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவரான தமிழ்ச் செல்வன் கூறுகையில்,

வட-கிழக்குப் பகுதிகளில் நடந்து வரும் சமீபத்திய வன்முறைகளுக்கு இலங்கை ராணுவமும் அவர்களோடு சேர்ந்து செயல்படும்சில ஆயுதம் தாங்கிய கும்பல்களும் தான் காரணம். இதன் மூலம் பொது அமைதியைக் கெடுக்கவும், வன்முறையைத்தூண்டிவிடவும் முயற்சி நடக்கிறது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாக அமலாக்கத் தயாராக இருக்கிறோம். உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்தவும் புலிகள்தயார். இதை நார்வே தூதர் ஹான்ஸ் பிராட்ஸ்கரிடம் தெரிவித்துள்ளோம்.

பேச்சுவார்த்தை, போர் நிறுத்த ஒப்பந்தம் இந்த விஷயங்களில் எங்களது உறுதி சற்றும் குறையவில்லை. இப்போதைய உடனடித்தேவை உடனே பேச்சுவார்த்தையைத் தொடங்குவது தான்.

அதிபர் ராஜபக்ஷே கூறுவது போல போர் நிறுத்த ஒப்பந்தத்தை திருத்த வேண்டிய அவசியமெல்லாம் இல்லை. நேரடியாகப்பேச்சுவார்த் நடத்துவது தான் ஆக்கிரமிப்புப் படைகளுக்கும் (இலங்கை ராணுவம்) பொது மக்களுக்கும் இடையே இயல்புநிலைமை திரும்புவதற்கும், மோதலைத் தவிர்ப்பதற்கும் உதவும் என்றார் தமிழ்ச்செல்வன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X