கோடியக்கரை மீனவர்கள் 12 பேர் கதி என்ன?
நாகை:
நாகை மாவட்டம் கோடியக்கரை கிராமத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கப் போய் தற்போது எங்கே சென்றனர்என்பது தெரியவில்லை.
கடல் கொந்தளிப்பில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நாகை அருகே இன்று ஃபனூஸ் புயல் கரையைக்கடக்கவுள்ளது. இதன் காரணமாக கடந்த 2 நாட்களாகவே நாகை கடல் பகுதி கடும் கொந்தளிப்பாக காணப்படுகிறது.மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோடியக்கரை பகுதியைச்சேர்ந்த 28 மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர். 7 படகுகளில் சென்ற அவர்களில் 16 பேர் குறிப்பிட்ட நேரத்தில்கரைக்குத் திரும்பி விட்டனர்.
ஆனால் 12 பேர் இன்னும் கரைக்குத் திரும்பவில்லை. லட்சுமணன், கண்ணன், காத்தமுத்து, ராஜேந்திரன், ஹரிதாஸ், வீரராஜு,வீரப்பன், கண்ணன், குணசுந்தரம், தங்கவேல், பாலகிருஷ்ணன், சந்துரு ஆகிய அந்த 12 பேரும் என்ன ஆனார்கள் என்பதுதெரியவில்லை.
கடலில் கடும் கொந்தளிப்பான நிலை நிலவுவதால் 12 பேரும் கடலில் அடித்துச் செல்லப்பட்டிருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.