துறைமுகங்கள் காலி: நடு கடலுக்கு அனுப்பப்பட்ட கப்பல்கள்- இந்தோனேஷிய கப்பல் எங்கே?
சென்னை:
தமிழகத்தை புயல் தாக்கியதால் சென்னை, தூத்துக்குடி, நாகை, கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் இருந்து அனைத்துப் பெரியகப்பல்களும் நடுக் கடலுக்கு அனுப்பப்பட்டன.
புயல் எச்சரிக்கை கூண்டு எண் 5ம் மற்றும் அதற்கு மேலும் உள்ள எண் கூண்டுகள் ஏற்றப்பட்ட அனைத்து கடலோர பகுதிகளிலும்இருந்த கப்பல்களும் நடுக்கடலுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டன.புயல் கரையைக் கடக்கும்போது கரைப் பகுதியில் தான் மிக பலத்த காற்று வீசும். நடுக் கடலில் பாதிப்பு அவ்வளவாக இருக்காது.
இதையடுத்து வேதாரண்யம், ராமேஸ்வரம், புதுச்சேரி, கடலூர், தூத்துக்குடி ஆகிய கடற்கரைகள், துறைமுகங்களில் இருந்தசரக்குக் கப்பல்கள், போக்குவரத்துக் கப்பல்கள், எண்ணெய்க் கப்பல்கள், கடற்படைக் கப்பல்கள் ஆகியவை நடுக்கடலுக்குகொண்டு செல்லும்படி உத்தரவிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து அனைத்துக் கப்பல்களும் துறைமுகங்களைக் காலி செய்தன.
இந்தோனேஷிய கப்பல் எங்கே?:
இதற்கிடையே, நாகப்பட்டிணம் துறைமுகத்திற்கு வந்து கொண்டிருந்த இந்தோனேஷிய சரக்குக் கப்பல் இன்னும் வந்துசேரவில்லை என்று கூறப்படுகிறது.
அந்தக் கப்பல் நவம்பர் 30ம் தேதி இந்தோனேசியாவின் டுமாய் நகரிலிருந்து பாமாயிலை ஏற்றிக் கொண்டு கிளம்பியது.வழக்கமான பாதையில் பயணித்திருந்தால், வெள்ளிக்கிழமை அக்கப்பல் நாகை வந்திருக்க வேண்டும்.
ஆனால் தற்போது வங்கக் கடலில் நிலவுகின்ற புயல் சூழ்நிலையில், கப்பல் இன்னும் வராமல் இருப்பதால், நடுக்கடலில்எங்காவது சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அந்தக் கப்பலிலிருந்து எந்தவித சிக்னலும் வரவில்லை என்றும்கூறப்படுகிறது.