புயலால் தென் மாவட்ட ரயில்களில் அலைமோதிய கூட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையிலிருந்து தென் மாவட்டம் செல்லும் ரயில்களில் கூட்டம் அலை மோதியது.

சென்னையை மிரட்டிய புயல் வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. இருந்தாலும் தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்துவருகிறது. இதையடுத்து எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பகல் நேர ரயில்களில்பயணிகள் கூட்டம் அலை மோதியது.

இன்று காலை 7.30 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்ட குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகள் கூட்டம் அதிகமாகஇருந்தது. பொதுப் பெட்டியிலும் அதிக அளவு கூட்டம் இருந்தது. மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலிலும் சுமார் 2,000பேர் பயணம் செய்தனர்.

பல பயணிகள் இரவு நேர முன்பதிவை ரத்து செய்து விட்டு பகல் ரயில்களில் ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர். இதனால் எப்போதும்இல்லாத அளவுக்கு எழும்பூர் ரயில் நிலையம் பயணிகள் கூட்டத்தால் திணறியது.

பலர் மழைக்கு பயந்து இரவு நேரத்தில் பயணம் செய்ய விரும்பாமல், பகலிலேயே ஊருக்கு புறப்பட்டது தான் கூட்ட நெரிசலுக்குகாரணம் என்று தெரிய வந்தது.

மும்பையில் இருந்து சென்னை வரும் தாதர் எக்ஸ்பிரஸ் ரயில் தாமதமாக வந்ததும் இன்னொரு காரணம் என்று தெரியவந்தது.அந்த பயணிகள் சொந்த ஊருக்கு செல்வதற்காக வந்ததால் எழும்பூர் ரயில் நிலையம் அதிக கூட்டம் இருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+