பிறந்த நாள் கொண்டாட்டம் வேண்டாம்: மு.க.அழகிரி
சென்னை:
மழை, வெள்ளத்தால் தமிழகமே தத்தளித்துக் கொண்டுள்ளதால் எனது பிறந்த நாளை திமுகவினர் யாரும் கொண்டாடவேண்டாம் என திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், எனது பிறந்த நாளை, என் விருப்பத்திற்கு மாறாக, கழகத் தோழர்கள்விழாவாக, விமரிசையாக கொண்டாட முன் வந்து விளம்பரங்கள் செய்து வருவதைக் கண்டு நான் மிகவும் வருந்துகிறேன்.கழகப் பொதுச் செயலாளர், தலைவர் கலைஞருடன் கலந்து பேசி, தனது பிறந்த நாளையொட்டி விளம்பரங்களோ, விழாஏற்பாடுகளோ எதையும் செய்யக் கூடாது என்று ஏற்கனவே அறிக்கை வெளியிட்டிருந்தார்.
எனவே அதைப் பின்பற்றி, புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் கவலையில் மூழ்கியுள்ள இந்த வேளையில்அவர்களுக்கான நிவாரணப் பணிகளை செய்ய வேண்டுமே அல்லாமல், பிறந்த நாள் விழா என்று நம்டைய நண்பர்கள்ஈடுபடுவது அறவே கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.
இதை மீறி யாராவது பிறந்த நாளை கொண்டாட முயன்றாலும், விளம்பரங்கள் செய்தாலும் அது கட்சிக் கட்டுப்பாட்டை மீறியசெயலாகும் . அவர்கள் மீது தலைமைக் கழகம் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்க நேரிடும் என்று தனதுஅறிக்கையில் அழகிரி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications