மதுரை நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை உயர்வு
சென்னை:
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து மதுரை உயர்நீதிமன்றக் கிளை நீதிபதிகளின்எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சமீபத்தில் புதிதாக 17 நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர்.இவர்கள் அனைவரும் சனிக்கிழமைபதவியேற்றுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.இன்னும் 4 காலியிடங்கள் உள்ளன. இந்த நிலையில், மதுரை கிளையின் நீதிபதிகள் எண்ணிக்கையும் தற்போதுஅதிகரிக்கப்பட்டுள்ளது. பற்றாக்குறை காரணமாக இங்கு இதுவரை 5 நீதிபதிகள் மட்டுமே பணியாற்றி வந்தனர்.
அதுவும் சுழற்சி முறையில் பணியாற்றி வந்தனர். தற்போது ஒட்டுமொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால்,மதுரை கிளை நீதிபதிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
பத்து நீதிபதிகள் இனிமேல் மதுரை கிளையில் செயல்படுவர். எனவே வழக்கு விசாரணைகள் துரித கதியில் நடைபெறும் எனஎதிர்பார்க்கப்படுகிறது. மதுரையைச் சேர்ந்த இரண்டு பெண் வழக்கறிஞர்கள் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளதுநினைவிருக்கலாம். இவர்கள் இருவரும் மதுரைக்கே அனுப்பபடக் கூடும் எனத் தெரிகிறது.