For Daily Alerts
Just In
கம்பன்-சேது-மாயவரம் எக்ஸ்பிரஸ் இன்று ரத்து
சென்னை:
தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனத்த மழை காரணமாக சென்னையிலிருந்து புறப்படும் கம்பன் எக்ஸ்பிரஸ், உள்பட 4ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.கடந்த 4 நாட்களாக புயல் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலான மழை பெய்தது. நேற்று வேதாரண்யம் அருகே புயல் கரைகடந்த பிறகும் தொடர்ந்து தென் மாவட்டங்களில் மழை நீடிக்கிறது.
இதன் காரணமாக முன்னெச்சரிக்கையாக நாகை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு செல்லும் கம்பன் எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம்எக்ஸ்பிரஸ், சேது எக்ஸ்பிரஸ், மாயவரம் பாசஞ்சர் ஆகியவை நேற்று தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு செல்லவில்லை.
இதன் காரணமாக மறுமார்க்கத்தில் தாம்பரத்திற்கு இன்று வந்து சேர வேண்டிய இந்த 4 ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.தென் மாவட்டங்களில் பெய்து வரும் பலத்த மழையால் தாம்பரம் மற்றும் எழும்பூருக்கு வர வேண்டிய அனைத்து ரயில்களும்காலதாமதமாக வருகின்றன.
Story first published: Sunday, December 11, 2005, 5:30 [IST]