For Daily Alerts
Just In
சதுர்வேதி மீதான குண்டர் சட்டம் ரத்து
சென்னை:
ஜெகஜால சதுர்வேதி சாமியார் மீதான குண்டர் சட்டம் செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.தொழிலதிபரின் மனைவி, மகளைக் கடத்திச் சென்று அவர்களை செக்ஸ்ரீதியில் துன்புறுத்தியதாக சதுர்வேதி கைதுசெய்யப்பட்டார். அவருக்கு ஹோமோ செக்ஸ் உள்ளிட்ட பிற இம்சை புத்திகள் இருப்பது தெரியவந்தது. அவர் தனது ஆசிரமத்தில்பல ஜெகஜால வேலைகள் செய்தது தெரிந்தது.
இதையடுத்து சதுர்வேதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதையடுத்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிபதி வி.பி.சிங் தலைமயிலான டிவிசன் பெஞ்ச் விசாரித்துசதுர்வேதி மீதான குண்டர் சட்டம் செல்லாது என உத்தரவிட்டது.
Story first published: Tuesday, December 13, 2005, 5:30 [IST]