கட்டணம் வாபஸ் இல்லை: கிரிக்கெட் வாரியம்
சென்னை:
சென்னையில் ரத்து செய்யப்பட்ட இந்திய- தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்திற்காக பெறப்பட்டநுழைவுக் கட்டணத்தைத் திருப்பித் தர முடியாது என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில்அளித்துள்ளது.
நவம்பர் 22ம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில், இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான ஒரு நாள்கிரிக்கெட் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால் கன மழை மற்றும் புயலால் போட்டி நடக்கவில்லை. ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. ஆனால் ரசிகர்களிடமிருந்துவசூலிக்கப்பட்ட நுழைவுக் கட்டணத்தை வாரியம் திருப்பித் தரவில்லை.
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மழை வரும் என்று தெரிந்தும் கூடகிரிக்கெட் சங்கம் போட்டியை நடத்தியது தவறு. மேலும், முன் கூட்டியே டிக்கெட் விற்பனையை மேற்கொண்டதும் தவறு.
எனவே ரத்து செய்யப்பட்ட ஆட்டத்திற்காக வசூலிக்கப்பட்ட நுழைவுக் கட்டணத்தைத் திருப்பித் தர உத்தரவிட வேண்டும் என்றுகூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு குறித்து பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.அதன்படி இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், கிரிக்கெட் போட்டிகளுக்கான தேதியை நிர்ணயம் செய்வது இந்திய கிரிக்கெட் வாரியமும், சர்வதேச கிரிக்கெட்வாரியமும்தான். எனவே தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இதற்கு பொறுப்பேற்க முடியாது.
மேலும், 80 சதவீத டிக்கெட்டுகள் விற்கப்பட்ட பின்னர்தான் மழை வரும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது.இதுதவிர, போட்டியைக் காண வசூலிக்கப்படும் தொகை திருப்பித் தர முடியாது என்று டிக்கெட்டின் பின்பக்கம் தெளிவாககுறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே ரசிகர்களிடம் வசூலிக்கப்பட்ட நுழைவுக் கட்டணத்தைத் திருப்பித் தர முடியாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் 20ம் தேதிக்கு தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, இப்ராகிம் கலிபுல்லாஆகியோர் அடங்கிய பெஞ்ச் ஒத்திவைத்தது.












Click it and Unblock the Notifications