For Daily Alerts
Just In
இன்று திருவண்ணாமலை மகா தீபம்
திருவண்ணாமலை:
திருக் கார்த்திகையையொட்டி திருவண்ணாமலை மலை உச்சியில் இன்று மாலை மகா தீபம் ஏற்றப்படுகிறது.
பெரிய கார்த்திகை என்று அழைக்கப்படும் திருக் கார்த்திகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகள் தோறும்இன்று அகல் விளக்குகள் ஏற்றி முருகப் பெருமானை மக்கள் வழிபடுவார்கள்.அக்னி தலமான திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலிலும் திருக் கார்த்திகை ஆண்டுதோறும் சிறப்பாககொண்டாடப்படும். மகா தீபம் எனப்படும் பிரமாண்ட தீபம் இன்று மாலை ஏற்றப்படுகிறது.
இதற்கு முன்னோட்டமாக இன்று அதிகாலை திருவண்ணாமலை கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதை ஆயிரக்கணக்கானபக்தர்கள் நேரில் கண்டு வழிபட்டனர்.
மாலை 6 மணியளவில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதற்காக பிரமாண்ட கொப்பரை, ராட்சத திரி, நூற்றுக்கணக்கான லிட்டர்நெய் ஆகியவை தயார் நிலையில் உள்ளன.
மகா தீபம் ஏற்றப்படுவதைக் காண திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர். இதற்காகசிறப்பு ரயில், பஸ் போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Comments
Story first published: Tuesday, December 13, 2005, 5:30 [IST]