ஜப்பானில் அமைதிப் பேச்சு: புலிகள் ஒப்புதல்
கொழும்பு:
இலங்கை அரசுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை ஜப்பானில் நடத்த விடுதலைப் புலிகள் முன் வந்துள்ளனர்.
முன்னதாக அமைதிப் பேச்சுவார்த்தைகளை தனது நாட்டில் நடத்த ஜப்பான் ஆர்வம் தெரிவித்தது. முந்தைய அரசுடனான பலசுற்றுப் பேச்சுவார்த்தைகள் தாய்லாந்தில் நடந்தன. ஆனால், அந்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.இந் நிலையில் இரு தரப்பினரும் ஒத்துக் கொண்டால் பேச்சுவார்த்தையை தங்கள் நாட்டில் நடத்தத் தயார் ஜப்பானின் சிறப்புஅமைதித் தூதர் யசூசி அகாசி தெரிவித்திருந்தார்.
ஜப்பானின் இந்த அழைப்பை புலிகள் ஏற்றுக் கொண்டுள்ளனர். இது குறித்து கிளிநொச்சியில் புலிகளின் செய்தித் தொடர்பாளர்தயா மாஸ்டர் கூறுகையில், விரைவில் ஜப்பானில் பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என்றார்.
இந்தியாவில் கருணா?:
இதற்கிடையே புலிகளிடம் பிடிபட்ட கருணா கும்பலைச் சேர்ந்த இருவர் அளித்துள்ள பேட்டியில், தங்களது தலைவர் கருணாஇந்தியாவில் இருந்து செயல்படுவதாகக் கூறியுள்ளனர்.
மேலும் தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே மோதலை உருவாக்கும் வகையில் தங்களது அமைப்பு செயல்பட்டுவருவதாகவும் உள்ளதாகவும் கூறியுள்ளனர். கருணா தரப்புக்கு இலங்கை ராணுவம் தான் ஆயுதங்கள், வாகனங்களைத் தந்துவருவதாகவும் கூறியுள்ளனர்.
இதற்கிடையே மட்டக்களப்பில் உள்ள கிரன் பகுதியில் இரு தமிழர்களை ஒரு கும்பல் வீடு புகுந்து துப்பாக்கி முனையில் கடத்திச்சென்று சுட்டுக் கொன்றுள்ளது.












Click it and Unblock the Notifications