புழல் ஏரி திடீர் திறப்பு: வீடுகளில் வெள்ளம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அருகே உள்ள புழல் ஏரி திடீரென திறக்கப்பட்டதால் ஏரியைச் சுற்றிலும் உள்ள பல பகுதிகளில் வெள்ளம் புகுந்துமக்கள் மீண்டும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்று புழல் ஏரி. தொடர் மழை காரணமாக ஏரி ஏற்கனவே நிரம்பியுள்ளது. இந்நிலையில் இன்று பிற்பகலுக்கு மேல் ஏரியில் நீர்க் கசிவு ஏற்பட்டது.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிகாரிகள், ஏரியிலிருந்து தண்ணீரை திறந்து விட்டனர். திடீரென தண்ணீர்திறக்கப்பட்டதால், அந்தத் தண்ணீர் குடியிருப்புகளுக்குள் புகுந்தது.
சாமியார் மடம், வடகரை, சடையாங்குப்பம் ஆகிய பகுதிகளிள் உள்ள வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. திடீர் என ஏரிதிறக்கப்பட்டு தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.












Click it and Unblock the Notifications