For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மகன் கொலை: ஆண்டித் தேவருக்கு டி.என்.ஏ. சோதனை

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

முன்னாள் எம்.எல்.ஏ. ஆண்டித்தேவருக்கு மரபணு சோதனை (டிஎன்ஏ சோதனை) நடத்த மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆண்டித் தேவருக்கு இரண்டு மனைவிகள். இதில் ஒரு மனைவியின் மகனான சிவராமன் சில ஆண்டுகளுக்கு முன்பு காணாமல்போய் விட்டார்.

ஒரு மனைவியின் தூண்டுதலால் இன்னொரு மனைவியின் மகனான சிவராமனை ஆண்டித் தேவரே கொலை செய்துவிட்டதாகக்கூறப்படுகிறது.

சிவராமனை ஆண்டித் தேவர்தான் கொலை செய்தார் என்று கூறி சிவராமனின் தாய் மாமன் மதுரை நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தார். இந்த வழக்கில் ஆண்டி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது.

இந் நிலையில் சமீபத்தில் கொடைக்கானல் அருகே உள்ள வருசநாடு பகுதியில் கொலை செய்து புதைக்கப்பட்ட தலையில்லாதஉடல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது சிவரமானுடைய உடல்தானா என்பதைக் கண்டறிய, அவரது எலும்புகள்சேகரிக்கப்பட்டுள்ளன.

இந்த உடல், சிவராமனுடையதுதானா என்பதைக் கண்டறிய ஆண்டித் தேவருக்கு மரபணு சோதனை நடத்த வேண்டும். எனவேஇதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரி மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி அய்யா சாமி வருகிற 23ம் தேதி சென்னையில் உள்ள தடயவியல் ஆய்வகத்தில் ஆண்டித்தேவருக்கு மரபணு சோதனை நடத்த சிபிஐக்கு அனுமதி அளித்தார்.

அன்றைய தினம் தேவர், சென்னை தடயவியல் ஆய்வகத்தில் ஆஜராக வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X