நில விற்பனை மெகா ஊழல்:சிபிஐ விசாரணை கோரி திமுக வழக்கு
சென்னை:
சென்னையை அடுத்த சிறுசேரியில், அரசுக்குச் சொந்தமான 103 ஏக்கர் நிலத்தை வெறும் 15 கோடி ரூபாய்க்கு சிங்கப்பூர் ரியல்எஸ்டேட் நிறுவனத்திற்கு தமிழக அரசு விற்றது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி திமுகவின் சார்பில்சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சிறுசேரியில் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள 103 ஏக்கர் நிலத்தை சிங்கப்பூரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றுக்குதமிழக அரசு ரூ. 15 கோடிக்கு விற்றது.ஆனால் இந்த நிலத்தின் உண்மையான மதிப்பு ரூ. 200 கோடிக்கும் மேலாகும். நிலத்தை அடிமாட்டு விலைக்கு விற்க ஆளும்தரப்பில் உள்ளோருக்கு ரூ. 100 கோடி வரை லஞ்சம் தரப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி சமீபத்தில் ஆளுனர் பர்னாலாவிடம் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன்தலைமையிலான அக் கட்சியினர் நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.
இந் நிலையில், திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.அதில், இந்த நில விற்பனை விதிமுறைகளுக்கு முரண்பாடாக நடந்துள்ளது. இந்த மோசடி விற்பனையால் தமிழக அரசுக்கு ரூ.190.55 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே இந்த நில விற்பனையை செல்லாது என்று அறிவிக்க வேண்டும். மேலும், இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தஉத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார் வீராசாமி.












Click it and Unblock the Notifications