ராமகிருஷ்ணா மிஷனுக்கு ஜெ. ரூ.1.84 கோடி
சென்னை:
ஆதரவற்ற மாணவர்கள் தங்கியுள்ள சென்னை ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லத்திற்கு முதலமைச்சர் ஜெயலலிதா ரூ.1.84கோடி நிதி வழங்கியுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:ஆதரவற்ற மற்றும் பெற்றோர்களால் கைவிடப்பட்ட மாணவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து அவர்கள் தங்கி பள்ளி மற்றும்தொழிற் கல்வியான பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து பயில, கல்வி வசதி அளிக்கும் வகையில் சென்னை மயிலாப்பூரில்ராமகிருஷ்ணா மிஷன் சார்பாக மாணவர் இல்லம் நடத்தப்படுகின்றது.
1905ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த மாணவர் இல்லத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு நிதியுதவி வழங்கி உதவிடவேண்டுமென்று முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் மாணவர் இல்லத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இவர்களின் கோரிக்கையை பரிவுடன் பரிசீலித்த முதலமைச்சர் தன்னலமற்ற சேவை செய்யும் இந்த மாணவர் இல்லத்தின் நலனைகருத்தில் கொண்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கு ரூ.1.84 கோடி நிதியுதவி வழங்கி உத்தரவிட்டார்.
இதற்கான காசோலையை முதலமைச்சர் ஜெயலலிதா ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லத்தின் செயலாளர் சுவாமிதேசிகாத்மானந்தாவிடம் நேரில் வழங்கினார் என்று கூறப்பட்டுள்ளது.