For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜபக்ஷே அந்தர் பல்டி: இறங்கி வருகிறார்

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

நார்வே உதவியுடன், விடுதலைப் புலிகளுடன் எந்த நாட்டில் வைத்தும், எல்லா பிரச்சனைகள் குறித்தும் பேசத் தயாராகஇருப்பதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.

முதலில் சுயாட்சி குறித்து பேச மாட்டோம் என்றார் அதிபர் ராஜபக்ஷே. பின்னர் நார்வே தலையீடு தேவையில்லை எனமறைமுகமாகத் தெரிவித்தார். மேலும் பேச்சுவார்த்தைகள் இலங்கையில் தான் நடத்தப்பட வேண்டும் என்றார்.

இந் நிலையில் அரசியல் பல்டி அடித்துள்ள ராஜபக்ஷே, புலிகளுடன் எந்தப் பிரச்சனை குறித்தும் விவாதிக்கத் தயாராகஇருப்பதாகவும், ஆசியாவில் உள்ள ஏதேனும் ஒரு நாட்டில் நார்வேயின் உதவியுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கத் தயார்என்றும் அறிவித்துள்ளார்.

இது குறித்து அரசின் செய்தித் தொடர்பாளர் நிர்மல் சிரிபாலா டி சில்வா கூறுகையில்,

புலிகளுடன் வேறு ஆசிய நாட்டில் வைத்து பேச்சு நடத்த இலங்கை அரசு முன் வந்திருப்பதாக ஜப்பான் அமைதித் தூதர் யசுசிஅகாசி கூறியிருப்பது உண்மை தான். எங்களது நிபந்தனைகளை நாங்கள் தளர்த்தியுள்ளோம். விட்டுக் கொடுத்துப் போக அரசுதயார். இப்போது புலிகளின் பதிலுக்காகக் காத்திருக்கிறோம்.

இந்த விஷயத்தில் தொடர்ந்து மத்தியஸ்தம் செய்யத் தயார் என்று நார்வே கூறியுள்ளது. முதலில் நின்று போன பேச்சுவார்த்தையைத்தொடங்க வேண்டும். எந்த விஷயம் குறித்தும் பேச அரசு தயார் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X