சென்னை மருத்துவமனைகள், டாக்டர்கள் வீடுகள், ஸ்கேனிங் சென்டர்களில் வருமான வரி ரெய்ட்
சென்னை:
சென்னையில் முக்கிய மருத்துவமனைகள், டாக்டர்களின் வீடுகள், ஸ்கேனிங் சென்டர்களில் வருமான வரித்துறை அதிகாரிகள்இன்று திடீரென அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
மதுரையில் சில மாதங்களுக்கு முன்பு மருத்துவமனைகள், ஸ்கேனிங் சென்டர்கள், பிரபல டாக்டர்களின் வீடுகளில் வருமான வரிஅதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.டாக்டர்களின் கூட்டுச் சதியோடு, அப்பாவி நோயாளிகளுக்கு அந்தச் சோதனை, இந்தச் சோதனை என்று கோடிக்கணக்கில்பணத்தைக் கறந்து லாபம் சம்பாதித்து வந்த பல பரிசோதனைக் கூடங்கள், ஸ்கேனிங் மையங்கள் அந்தச் சோதனையில் சிக்கின.
பல முன்னணி டாக்டர்கள் இந்த தனியார் ஸ்கேனிங் மையங்களுடன் கூட்டுச் சேர்ந்து கோடிக்கணக்கில் சம்பாதித்து வீடுகளையும்,பங்களாக்களையும் கட்டியது அச் சோதனையில் வெட்ட வெளிச்சமானது.
தமிழகத்தையே உலுக்கிய அந்தச் சம்பவத்தின் தொடர்ச்சியாக தற்போது சென்னையிலும் வருமான வரித்துறை அதிகாரிகள்அதிரடி சோதனையை இன்று மேற்கொண்டனர்.
சென்னையில் உள்ள முக்கியமான 18 மருத்துவமனைகள், முன்னணி டாக்டர்கள், ஸ்கேனிங் மையங்கள் உள்ளிட்டவற்றில் இன்றுகாலை முதல் வருமான வரி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இன்று காலை முதல் நடந்து வரும் இந்த அதிரடி சோதனையால் சென்னை மருத்துவ வட்டாரம் பெரும் திகிலில் ஆழ்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications