For Daily Alerts
Just In
கார்த்திகை விளக்கால் வீட்டில் தீ விபத்து: 3 குழந்தைகள் பலி
சேலம்:
சேலத்தில் மகா கார்த்திகை தினத்தையொட்டி வைக்கப்பட்ட தீபத்தால் வீடு தீப்பற்றிக் கொண்டது. இதில் 3 குழந்தைகள் உடல்கருகி பலியாகிவிட்டனர்.நேற்றிரவு இச் சம்பவம் நடந்தது. பெட்ரோல் இருந்த பிளாஸ்டிக் கன்டெய்னரின் மீது இந்த வீட்டினர் விளக்கேற்றிவைத்துள்ளனர். அந்த தீபத்தின் நெருப்பு கன்டெய்னர் மீது பட்டு தீ பிடித்தது.
இந்தத் தீ விரைவாக பரவியதில் வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதில் வீட்டில் இருந்த 3 குழந்தைகள் உடல் கருகிசம்பவயிடத்திலேயே உயிரிழந்தனர். குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் தீக்காயம் ஏற்பட்டது.
அவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Story first published: Wednesday, December 14, 2005, 5:30 [IST]