ராகிங்: கோட்டையில் தீக்குளிக்க முயன்ற மாணவர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தன்னை ராகிங் செய்த 2 சீனியர் மாணவர்களை கைது செய்யக் கோரி சென்னையில் தலைமைச் செயலகம் முன் தற்கொலைக்குமுயன்ற மாணவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

திருவண்ணாமலையில் திருவள்ளூவர் பொறியியல் கல்லூரியில் எம்.எஸ்.சி முதலாம் ஆண்டு படித்து வருபவர் ராமச்சந்திரன்(வயது 21). சென்னை தலைமைச் செயலகம் முன்பு மண்ணெண்ணை கேனுடன் வந்த இவரை பணியில் இருந்த போலீசார்சந்தேகப்பட்டு விசாரிக்க முயன்றனர்.

உடனே அந்த மாணவர் கேனில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து தன் மீது ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.அவரை மடக்கி பிடித்த போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது, தனது கல்லூரியில் படிக்கும் 2 சீனியர் மாணவர்கள் தன்னை ராகிங் செய்ததாகவும், அது தொடர்பாக கல்லூரிநிர்வாகத்திடம் புகார் கொடுத்தும் பலனில்லை என்றும், அதனால் மனம் உடைந்து தற்கொலை செய்ய முயன்றதாகவும்போலீசாரிடம் தெரிவித்தார்.

இதனால் ராமச்சந்திரனை போலீசார் அண்ணாநகரில் உள்ள தன்னார்வு அமைப்பான ஸ்னேகா என்ற மன சிதைவு நலஆலோசனை மையத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருந்த டாக்டர்கள் அவருக்கு ஆலோசனை வழங்கினர்.

இதை தொடர்ந்து ராமச்சந்திரனை ராகிங் செய்த மாணவர்கள் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.அவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+