பிளஸ்-2 தேர்வுகள்: மார்ச் 3ல் தொடக்கம்
சென்னை:
தமிழக சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் முதல் வாரத்திலேயே தொடங்குகின்றன.இதன்படி பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 3ம் தேதி தொடங்குகின்றன.
ஆண்டுதோறும் பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 2வது அல்லது 3வது வாரத்தில் தொடங்கி ஏப்ரல் முதல் அல்லது இரண்டாவது வாரஇறுதியில் நிறைவு பெறும். ஆனால் இந்த முறை தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் மாதத்தில் தேர்வு வரவிருப்பதாலும், அரசுஅதிகாரிகளை தேர்தல் பணியில் ஈடுபடுத்தபட உள்ளதாலும், பள்ளிகளில் வாக்குச் சாவடி அமைக்க உள்ளதாலும் பிளஸ் 2இறுதித் தேர்வை தேர்தலுக்கு முன் கூட்டியே நடத்தி முடிக்க கல்வி நிர்வாகம் முடிவு செய்திருந்தது.இதன்படி திருச்சி மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும், பிளஸ் 2 தேர்வுக்கான பட்டியல் தயாரித்து மாவட்ட கல்வி நிர்வாகஅலுவலகம் அனுப்பியுள்ளது.
தேர்வு அட்டவணை விவரம் வருமாறு:
மார்ச் 3 - தமிழ் முதல் தாள்
மார்ச் 4 - உளவியல், சுருக்கெழுத்து
மார்ச் 6 - தமிழ் 2ம் தாள்
மார்ச் 7 - ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் 8 - ஆங்கிலம் 2ம் தாள்
மார்ச் 9 - மனையியல், தட்டச்சு
மார்ச் 10 - இயற்பியல், வரலாறு
மார்ச் 11- சிறப்பு தமிழ்
மார்ச் 13 - வேதியல், தர்க்கவியல்
மார்ச் 14 - வணிகவியல்
மார்ச் 15 - புவியியல்
மார்ச் 16 - உயிரியல், தாவரவியல், வணிக கணிதம்
மார்ச் 17- தத்துவம், செவிலியர் அறிவியல், தொழிற்கல்வி கருத்தியல் தேர்வுகள் மற்றும் கணினி
மார்ச் 18- சமூகவியல்
மார்ச் 20 - கணிதம், விலங்கியல்
மார்ச் 21 - பொருளியல்
மார்ச் 22 - புள்ளியியல், இந்திய இசை
மார்ச் 23 - கணக்கியல், நுண்ணுயிரியல், சித்தா
மார்ச் 24 - அறிவியல், உயிர் வேதியல்
இந்த பட்டியலில் பள்ளிகளிலிருந்து மாற்றம் தேவை என தெரிவிக்கப்பட்டால் சிறு மாற்றங்கள் செய்யப்படும். எனினும்அதற்கான வாய்ப்பு குறைவு என கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.