திருவள்ளூர் ஏரி உடைந்து ஆவடி சாலை துண்டிப்பு
Subscribe to Oneindia Tamil
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தண்ணீர் குளம் ஏரி உடைந்து தண்ணீர் வெளியேறுகிறது. இதனால் திருவள்ளூர்- ஆவடி சாலைதுண்டிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் பெய்த மழையால் திருவள்ளூரில் உள்ள தண்ணீர் குளம் ஏரி நிரம்பி உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது.
இதனால் காக்களூர் சுற்றியுள்ள தொழிற்சாலைகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் இந்த தண்ணீர் திருவள்ளூர்-ஆவடிநெடுஞ்சாலையில் வெள்ளமாக பாய்ந்தோடுவதால் சாலை துண்டானது. இதனால் அந்தச் சாலையில் போக்குவரத்துபாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்தப் பகுதியில் உள்ள வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துவிட்டது.
சாலையில் உள்ள பள்ளங்களை வண்டியில் வருபவர்களுக்கு அடையாளம் காண்பித்து எச்சரிப்பதற்காக சாலையின் இருபுறமும்சிகப்பு கொடிக் கம்பங்கள் நடப்பட்டுள்ளன.
பல இடங்களில் மணல் மூடைகளை அடுக்கி வைத்து வெள்ளத்தை தடுத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications