சித்திரவதை: நஷ்டஈடு கோரி முத்துலட்சுமி வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக மற்றும் கர்நாடக அதிரடிப் படையினரால் சித்திரவதைக்கு ஆளான மலைவாழ் மக்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நஷ்ட ஈடுவழங்குமாறு இரு மாநில அரசுகளுக்கும் உத்தரவிடக் கோரி வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி சென்னை உயர் நீதிமன்றத்தில்வழக்குத் தொடர்ந்துள்ளார்.

முத்துலட்சுமி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில், வீரப்பன் வேட்டை என்ற பெயரில், தமிழக மற்றும் கர்நிாடகஅதிரடிப்படையினர் சத்தியமங்கலம், பண்ணாரி உள்ளிட்ட மலை கிராமங்களில் பல பேரைக் கைது செய்து சித்திரவதைசெய்தனர்.

அவர்களை அடித்து, உதைத்தும், கொடுமைப்படுத்தியும், கைது செய்து சிறையில் அடைத்தும் மலை வாழ் மக்களை வாட்டிவதைத்தனர்.

அதிரடிப்படையால் கைது செய்யப்பட்ட அப்பாவி மலை வாழ் மக்கள் தமிழக மற்றும் கர்நாடக சிறைகளில் இன்னும் கூடஅடைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 28 பேரும், கர்நாடகத்தில் 38 பேரும் சித்திரவதைக்கு ஆளாகி இன்னும் சிறையில்உள்ளனர்.

மலை வாழ் மக்கள் சித்திரவதைக்குள்ளானதை இரு மாநில அரசுகளும் நீதிபதி சதாசிவம் கமிஷன் விசாரணையின்போது ஒத்துக்கொண்டுள்ளன. இவர்களுக்கு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும் என்று சதாசிவம் கமிஷன் உத்தரவிட்டும் கூட இன்னும்அது வழங்கப்படவில்லை.

எனவே பாதிப்புக்குள்ளான மலை வாழ் மக்களுக்கு தலா ரூ. 10 லட்சம் வழங்கப்பட வேண்டும். இடைக்கால நிவாரணமாக ரூ. 2லட்சம் வழங்க இரு மாநில அரசுகளுக்கும் உத்தரவிட வேண்டும் என்று அதில் முத்துலட்சுமி கோரியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+