For Daily Alerts
Just In
அந்தமான் அருகே மீண்டும் ஒரு புயல் சின்னம்
டெல்லி:
இன்று காலை (15ம் தேதி) 8 மணிக்கு எடுக்கப்பட்ட இன்சாட் செயற்கைக் கோள் படம் |
அந்தமானுக்கு அருகே தென் கிழக்கு வங்கக் கடலில் புதிய புயல் சின்னம் உருவாகியிருப்பதாக தேசிய வானிலை ஆராய்ச்சிமையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மையத்தின் தலைவர் அகிலேஷ் குப்தா டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், அந்தமானுக்கு அருகேதென் கிழக்கு வங்கக் கடலில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.
இந்த தாழ்வுப் பகுதி கடந்த 24 மணி நேரத்தில் 400 கி.மீ. தொலைவு நகர்ந்துள்ளது. இது மேலும் நகர்ந்து அடுத்த 3 நாட்களில்தமிழக கடலோரத்தை நெருங்கக் கூடும்.
எனவே அடுத்த 3 நாட்களில் தமிழக கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என்று குண்டைப்போட்டுள்ளார்.
Comments
Story first published: Thursday, December 15, 2005, 5:30 [IST]