ரயில்களில் எலி வேட்டை!!!
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
ரயில்களில் எலிகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இதையடுத்து எலிகளை வேட்டையாட ரயில்வே நிர்வாகம் முடிவுசெய்துள்ளது.
இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:ரயில் பெட்டிகளில் குறிப்பாக ஏசி வசதியுள்ள பெட்டிகளில் இரவு நேரங்களில் எலிகளின் தொல்லை அதிகமாக உள்ளதாகபுகார்கள் வருகின்றன. இதைத் தொடர்ந்து ரயில்களில் எலிகளின் அட்டகாசத்தை ஒழிக்க சிறப்பாக தயாரிக்கப்பட்ட காகிதத்தால்ஆன வலை தயார் செய்யப்பட்டுள்ளது.
இதில் எலிகளை கவரும் மருந்து தடவப்பட்டிருக்கும். அந்த மருந்தை எலி சாப்பிடும் போது அந்த காகித வலையில் அப்படியேமாட்டிக் கொள்ளும்.
இந்த முறையை சில பெட்டிகளில் சோதனை செய்து பார்த்ததில் பல எலிகள் இதுவரை சிக்கியுள்ளன என்றனர்.
தஞ்சாவூர்-மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இரவு நேரத்தில் ரயில்வே ஊழியர்கள் இருக்கைகளுக்கு அடியில் இந்த காகித வலையை10 இடங்களில் வைத்தனர். அதில் 6 எலிகள் சிக்கி இறந்தன.












Click it and Unblock the Notifications