For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூ.16 கோடி போதை பொருள்: 3 பேர் கைது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னைக்கு ரயிலில் கடத்திவரப்பட்ட ரூ.16 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்களை போலீசார் பறிமுதல் செய்து 3 பேரைகைது செய்தனர்.

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியிலிருந்து சென்னை வந்த அகிலங்கிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் போதைப் பொருள்கள் கடத்திவருவதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் படி சென்னை சென்டிரல் வந்த அந்த ரயிலில் பலத்த சோதனையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது பல்வேறு கலர்களில்33 பொட்டலங்களில் 16 கிலோ மற்றும் 817 கிராம் ஹெராயின் போதைப் பவுடர் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அவற்றின் மதிப்பு ரூ.16 கோடி ஆகும்.

இந்த போதைப் பவுடரை கடத்தி வந்ததாக சென்னை சூளைமேட்டை சேர்ந்த ஜி. ஜெயந்தி என்கிற லட்சுமி மற்றும் அவரது மகன்ஜெகன் என்கிற ரவி ஆகிய 2 பேரையும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இந்த கடத்தலின் தலைவனாக செயல்பட்ட மேற்கு மாம்பலத்தில் வசிக்கும் இலங்கையை சேர்ந்த சிவபாலன் என்கிற பாலன்என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் இந்த ஹெராயின் போதைப்பவுடரை இலங்கைக்கு கடல்வழியாக கடத்தி செல்ல திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது.

இதை தொடர்ந்து போலீசார் இந்த கடத்தலில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்று கைது செய்யப்பட்ட 3 பேரிடமும்விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X