For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தை நெருங்கும் புதிய புயல்: இப்போது 650கிமீ தொலைவில்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

வங்கக் கடலில் மீண்டும் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தமிழகக் கடலோரத்தையொட்டி வேகமாக நகர்ந்துவருகிறது. இன்று பகல் நிலவரப்படி அது நாகப்பட்டினத்தில் இருந்து தென் கிழக்கே 650 கிமீ தூரத்தில் உள்ளது.

இது தொடர்ந்து மேற்கு நோக்கி நகர்ந்து வருவதால் நாளை முதல் தமிழகம், பாண்டிச்சேரியில் மீண்டும் கன மழை பெய்யும் எனவானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த நவம்பர் மாதம் தொடங்கியதிலிருந்து தென் கிழக்கு வங்ககடலில் அடுத்தடுத்து 5புயல் சின்னங்கள் உருவாகிவிட்டன. இதனால் சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் கன மழை பெய்து பலத்த சேதத்தைஏற்படுத்தியது.

இந்த நிலையில் தமிழக மக்களை அச்சுறுத்தும் வகையில் வங்க கடலில் மீண்டும் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்உருவாகியுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மைய இயக்குநர் ரமணன் கூறியதாவது:

இப்போது தென் கிழக்கு வங்ககடலில் நாகப்பட்டினத்தில் இருந்து 650 கிமீ காற்றழுத்த தாழ்வு மண்டலம் உள்ளது. இது மேலும்வலுவடைந்து வருகிறது. தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து வரும் இந்த மண்டலத்தால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று(வெள்ளிக்கிழமை) இரவு முதல் அல்லது நாளை காலை முதல் மழை பெய்யும்.

நாளை (சனிக்கிழமை) முதல் கடலோரப் பகுதிகளில் 50 கிமீ முதல் 60 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும். இதன் காரணமாக கடல்கொந்தளிப்பாக இருக்கும். எனவே மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கையை நோக்கி நகர்ந்து செல்லவும் வாய்ப்புள்ளது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X