கும்பகோணம்: டாக்டரின் வங்கி லாக்கரில் நகைகள் பறிமுதல்
கும்பகோணம்:
கும்பகோணத்தில் டாக்டர் ஒருவரின் வங்கி லாக்கரில் இருந்து பல லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் சொத்துஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை மற்றும் கும்பகோணத்தில் பிரபல மருத்துவமனைகள், டாக்டர்களின் வீடுகளில் இன்றும் தொடர்ந்து வருமான வரிசோதனைகள் நடந்து வருகிறது.
இந்தச் சோதனைகளில் கணக்கில் காட்டப்படாத ரூ. 8 கோடி முதல் ரூ. 12 கோடி வரையில் மதிப்புள்ள நகை, பணம் ஆகியவையும்மேலும் பல கோடி மதிப்புள்ள சொத்துக்களின் ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கும்பகோணம் டாக்டரின் , வங்கி லாக்கரில் இருந்து சொத்து ஆவணங்கள், பல லட்சம் மதிப்புள்ள நகைகளைவருமானவரித்துறையினர் பறிமுதல் செய்தனர். கும்பகோணம் டாக்டர் கவுரி, மருமகன் மணிவண்ணன் ஆகியோரதுமருத்துவமனை, திருமண மண்டபம், குடியிருப்பு வளாகங்களில் திருச்சி, கோவை, மதுரையில் இருந்துவருமானவரித்துறையினர் 70 பேர் கடந்த இரண்டு நாளாக அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
விடிய, விடிய நடந்த சோதனையில் ஐ.சி.ஐ.சி.,ஐ., கனரா, பாரத ஸ்டேட், இந்தியன் வங்கி கிளைகளில் டாக்டரின்லாக்கர்களையும் திறந்து சோதனை நடத்தினர். இதில் பல லட்சம் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், நகைகளை பறிமுதல்செய்யப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்