கொலையை மறைத்த குஷ்புவுக்கு நீதிமன்றம் சம்மன்
சென்னை:
சென்னை எழும்பூர் தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் மாநில மாணவர் அணிச் செயலாளர்ரவிச்சந்திரன் ஒரு வழக்குத் தொடர்ந்தார். அதில், சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் இரண்டரை வயது சிறுமிகழிப்பறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
அதை நான் பார்த்தும் கூட அதை வெளியில் சொல்ல முடியவில்லை. காரணம் பெரிய இடத்து ஆட்கள் அதில்சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்று நடிகை குஷ்பு இரண்டு பத்திரிகைகளுக்குப் பேட்டி அளித்துள்ளார்.
ஆஒரு கொலை நடப்பதை தெரிந்திருந்தும் அதை காவல்துறைக்குத் தெரிவிக்காமல் விட்டது குற்றமாகும். எனவே இதுகுறித்துடிஜிபி அளவில் அல்லது மாஜிஸ்திரேட் அளவிலான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வழக்கறிஞர் கோரியிருந்தார்.
இதேபோல திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சதீஷ் என்பவரும் மனு தாக்கல் செய்திருந்தார். வியாழக்கிழமை இரு மனுக்களும்விசாரணைக்கு வந்தன. ஏற்கனவே ரவிச்சந்திரன் ஆஜராகி சாட்சியம் அளித்து விட்டதால், 2வது மனுவைத் தாக்கல் செய்த சதீஷ்நேற்று சாட்சியம் அளித்தார்.
அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், குஷ்பு, சம்பந்தப்பட்ட பத்திரிகைகளின் நிருபர்களை நேரில்வரவழைத்து அவர்களிடம் விளக்கம் கேட்க வேண்டும்.
அதன் பிறகு டிஜிபி அல்லது மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடுவது குறித்து முடிவு செய்யலாம். ஒருவேளைவிசாரணைக்கு உத்தரவிட நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லாவிட்டால், சம்பந்தப்பட்ட காவல் நிலைய விசாரணைக்குஉத்தரவிடலாம் என்றனர்.
இதை ஏற்ற நீதிபதி மகாராஜன், வருகிற 28ம் தேதி குஷ்பு, குமுதம் ஆசிரியர் பிரியா கல்யாணராமன், நிருபர் சரவணக்குமார்ஆகியோரை நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.