ரயில் பாதையில் தொங்கும் பாறைகள்
சின்னாளபட்டி:
![]() |
தென் மாவட்டங்களில் இருந்து, சென்னை மற்றும் வட மாநில நகரங்களுக்குச் செல்லும் ரயில்கள் அம்பாத்துறை-கொடைரோடுரயில் நிலையங்களை கடந்து தான் செல்ல வேண்டும். சமீபத்தில் பெய்த கன மழையால் இங்கு பெரிய பாறைகள் தண்டவாளத்தில்உருண்டு விழுந்து, சென்னை உள்பட பல நகரங்களுக்கு ரயில் போக்குவரத்து 3 நாட்களுக்கு துண்டிக்கப்பட்டது.சிலதினங்களுக்கு முன் கூட மண் சரிவு ஏற்பட்டு ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இன்னும் அந்த ரயில் பாதையில் ஆபத்து தீர்ந்தபாடில்லை. பல இடங்களில் பாறைகள் அபாயகரமாக சரியும் நிலையில் உள்ளன.எப்போது வேண்டுமானாலும், இந்தப் பாறைகள் உருண்டு விழலாம். இங்கு மண்சரிவு காரணமாக பாறைகள் வலுவிழந்துஅந்தரத்தில் ஊசலாடுகின்றன. அடுத்து ஒரு சிறு மழை பெய்தால் கூட பாறைகள் உருண்டு ரயில் பாதையில் விழுந்து விடும்நிலையில் உள்ளது.
மேலும் கன்னியாகுமரி, மதுரை போன்ற தென்மாவட்டப் பகுதிகளில் இருந்து டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர் போன்றமுக்கிய நகரங்களுக்கு ரயில்கள் இந்த மலைக்குகைப் பாதை வழியாகத்தான் செல்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து தென்னக ரயில்வே மதுரைக் கோட்ட உதவி மேலாளர் சுயம்புலிங்கம் கூறுகையில், அபாயகரமாகத் தொங்கிகொண்டிருக்கும் பாறைகளை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க உள்ளோம்.
முதற் கட்டமாக பாறைகளை அகற்ற ரூ. 60 லட்டசத்துக்கு டெண்டர் விட்டிருக்கிறோம். இந்தப் பணி ஓரிரு நாட்களில் துவங்கிவிடும். இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் பணிகள் நடைபெற உள்ளன என்றார்.













Click it and Unblock the Notifications