பில்கேட்ஸ், மாட்டு வண்டி: சு.சுவாமி நக்கல்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை வந்த பில்கேட்ஸை மாட்டு வண்டியில் கூட்டிப் போயிருந்தால் கூட நிச்சயம் அவர் வந்திருப்பார் என்று ஜனதாக் கட்சித்தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த நக்கல் சுவாமி கூறுகையில், சென்னைக்கு வந்த பில் கேட்ஸை டைடல்பூங்காவுக்குக் கூட்டிச் செல்ல நினைத்தேன். ஆனால் ரோடு சரியில்லாததால் அவரை கூட்டிச் செல்லவில்லை என்று மத்தியஅமைச்சர் தயாநிதி மாறன் கூறியுள்ளார்.இது ரொம்பவும் வெட்கக்கேடான விஷயம். கம்ப்யூட்டர், சாப்ட்வேர் என்றால் பில்கேட்ஸ் மிகவும் ஆர்வமாக வருவார்.அப்படிப்பட்டவரை டைடல் பூங்காவுக்குக் கூட்டிப் போயிருந்தால் நிச்சயம் மகிழ்ந்திருப்பார், சென்னையில் தனது நிறுவனக்கிளையை அமைப்பது குறித்துக் கூட பரிசீலனை செய்திருப்பார்.
ஆனால் ரோடு சரியில்லை, எனவே கூட்டிச் செல்லவில்லை என்று தயாநிதி மாறன் போன்ற பொறுப்பான அமைச்சர் பேசியதுதவறு. அவரை நடத்தியோ அல்லது மாட்டு வண்டியிலோ கூட கூட்டிப் போயிருக்கலாம். நச்சயம் தட்டாமல் அவர் வந்திருப்பார்.அதை விடுத்துக் கதை விடுகிறார் தயாநிதி மாறன் என்றார் சு.சுவாமி.












Click it and Unblock the Notifications