For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதுரை: வைகை டிவி உரிமையாளர் வெட்டிக் கொலை

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

மதுரையில் தனியார் கேபிள் டிவி நிறுவனத்தின் உரிமையாளர் நேற்றிரவு அவரது அலுவலகத்தில் வைத்து வெட்டிக் கொலைசெய்யப்பட்டார்.

தனியார் கேபிள் டிவி நிறுவனங்களுக்கு இடைடே நடந்து வரும் தொழில் போட்டி காரணமாக இந்தக் கொலை நடந்துள்ளது.

மதுரை மாவட்ட காங்கிரஸ் பொருளாளரின் மகனான காந்தி, வைகை டிவி நெட்வோர்க்கை நடத்தி வந்தார். தமிழகத்தின் முக்கியகேபிள் டிவி நெட்வோர்க்கான சுமங்கலி கேபிள் விஷனுக்கு மதுரை ஏஜென்டாக இவர் இருந்தார்.

இவரது வைகை டிவி நெட்வோர்க் தான் மதுரை நகரில் 75 சதவீத வீடுகளுக்கு கேபிள் டிவி இணைப்பு கொடுத்துள்ளது. மேலும்வைகை டிவி என்ற ஒரு கேபிள் டிவியையும் தனியாக நடத்தி வந்தார்.

இந் நிலையில் 8 பேர் கொண்ட கும்பல் இவரது அலுவலகத்துக்குள் அரிவாள்களுடன் நேற்றிரவு புகுந்தது. முதலில் இவரது வலதுகையை வெட்டிய அக் கும்பல் பின்னர் அவரது முதுகில் சரமாரியாக வெட்டியது. இதையடுத்து அவரது தலையின் பின் பகுதியில்அக் கும்பல் வெட்டிச் சாய்த்தது.

கீழே சரிந்து விழுந்த காந்தி இறந்துவிட்டாரா என்பதை உறுதி செய்த பின்னர் அக் கும்பல் அங்கிருந்து சாவகாசமாகக் கிளம்பிச்சென்றது.

இவரது வைகை டிவி அலுவலகம் அமைந்துள்ள இரண்டாவது மாடியில் வைத்து இந்தக் கொலை நடந்த போது ஊழியர்கள் 4பேரும் அங்கிருந்தனர். கொலையாளிகள் இவர்களை ஏதும் செய்யவில்லை.

கொலைக் கும்பலைப் பிடிக்க தனிப் படை அமைக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X