நாகையை நெருங்கும் புயல்
சென்னை:
![]() |
வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய புயல் சின்னம் வேகமாக நகர்ந்து வருகிறது. இப்போது அது வலுவடைந்துள்ளதாகவானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. இந்த புதிய புயல் சின்னம் தற்போது நாகைக்கு மேற்கு வட மேற்கு திசையில்550 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. தொடர்ந்து அதே திசையில் புயல் சின்னம் நகர்ந்து வருவதாகவும்வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இன்று இரவு முதல் கடலோர தமிழகத்திலும், புதுவையிலும் கன மழை பெய்யும் என்றும் மணிக்கு 60கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
புயல்சின்னம் மேலும் நெருங்கி வரும் போது தான் அது எங்கு கரையைக் கடக்கும் என்பதைக் கணிக்க முடியும் என்றுவானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
இதை தொடர்ந்து நாகை கடற்கரையில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கொடி ஏற்றப்பட்டுள்ளது. மேலும் சென்னை, காஞ்சிபுரம்,திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி,தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் கன மழை பெய்யும்.
ராமேஸ்வரத்தில் புயல் எச்சரிக்கை கொடி:இந் நிலையில் ராமேஸ்வரம் கடற்கரையில் முதலாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம், பாம்பன் கடலோரப் பகுதிகளில் முதலாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதோடு கரையோரமீனவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் இரவிலும் வெள்ளை விளக்குகள் எரியவிடப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டது.
மேலும் ராமேஸ்வரம் மீன்துறை அலுவலகத்தில் இன்று மீன்பிடி அனுமதி டோக்கன் வழங்குவதும் நிறுத்தப்பட்டது. மீனவர்கள்யாரும் கடலுக்குள் செல்லவில்லை. நேற்று மாலை ராமேஸ்வரம் கடல் பகுதியில் 40 கி.மீ வேகத்தில் காற்று வீசியது.













Click it and Unblock the Notifications