For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தாயார் மரணம்: வருவாரா கராத்தே?

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தலைமறைவாக இருக்கும் சென்னை மாநகராட்சி துணை மேயர் கராத்தே தியாகராஜனின் தாயார் அவரது சொந்த ஊரில்மரணமடைந்தார். அவரது இறுதி நிகழ்ச்சியில் கராத்தே கலந்து கொள்ளக் கூடும் என்பதால் சொந்த ஊரானதிருத்துறைப்பூண்டியில் போலீஸார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை மாநகரில் விளம்பரப் பலகைகள் வைப்பதில் முறைகேட்டில் ஈடுபட்டது உள்ளிட்ட பல்வேறு புகார்களின் பேரில்கராத்தே தியாகராஜனை போலீஸார் கைது செய்யத் திட்டமிட்டனர். இதைத் தொடர்ந்து அவர் தலைமறைவாகி விட்டார்.

டெல்லியில் மத்திய அமைச்சர் மணிசங்கர அய்யரின் பாதுகாப்பில் அவர் இருப்பதாக முன்பு கூறப்பட்டது. அவரைப் பிடிக்கசென்னை போலீஸார் டெல்லியில் முகாமிட்டுத் தேடி வந்தனர். ஆனால் அவர் போலீஸ் பிடியில் சிக்காமல் இருந்து வருகிறார்.

இந்த நிலையில், கராத்தே தியாகராஜன் நேபாளம் தப்பி விட்டதாக கூறப்பட்டது. இந்தச் சூழ்நிலையில் கராத்தே தியாகராஜனின்தாயார் பாலச்சந்திரா திருத்துறைப்பூண்டியில் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 65. தஞ்சாவூர் மாவட்ட மகளிர் காங்கிரஸ்உறுப்பினராக இருந்தவர்.

தாயார் மறைந்தது குறித்த தகவல் கராத்தேவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள கராத்தேவின் குடும்பத்தினரும்,உறவினர்களும் திருத்துறைப்பூண்டிக்கு விரைந்துள்ளனர்.பாலச்சந்திராவின் இறுதிச் சடங்குகள் நாளை நடக்கவுள்ளது.

இதனால் தாயாரின் இறுதி நிகழ்ச்சிகளில் கராத்தே கலந்து கொள்ளக் கூடும் என்று தெரிகிறது. அவர் மாறுவேடத்தில் வருவாராஅல்லது நேரடியாக கலந்து கொள்வாரா என்பது குறித்துத் தெரியவில்லை.

இதைத் தொடர்ந்து கராத்தே திருத்துறைப்பூண்டிக்கு வந்தால் அவரைக் கைது செய்ய போலீஸ் படை திருத்துறைப்பூண்டியில்மாறுவேடத்தில் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்திலும் போலீஸார் மாறுவேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இது தவிர திருச்சி விமானநிலையத்திலும் போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X