For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெங்களூர் பெண் என்ஜீனியர் கொலை: சென்னை போலீஸ் உஷார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பெங்களூரில் கால் சென்டரில் வேலை பார்த்து வந்த சாப்ட்வேர் என்ஜீனியர் பிரதீபா, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின்டிரைவராலேயே கற்பழித்துக் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை கால்சென்டர்களில் வேலை பார்த்து வரும் ஓட்டுநர்கள் குறித்த விவரங்களை சென்னை போலீஸார் சேகரித்து வருகின்றனர்.

பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள கால் சென்டர் ஒன்றில் பணியாற்றி வந்தவர் பிரதீபா. இவரை, அதே நிறுவனத்தில்ஓட்டுநராகப் பணியாற்றி வரும் சிவக்குமார் என்பவர், வேலைக்கு அழைத்துச் செல்லும் வழியில் கடத்திச் சென்று கற்பழித்துக்கொலை செய்து விட்டார்.

இந்த சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் உள்ள கணிப்பொறி நிறுவனங்கள், கால்சென்டர்கள் உள்ளிட்டவற்றில் பணியாற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்து பெங்களூர் மாநகர காவல்துறை உயர் அதிகாரிகள்இன்று காலை கூடி ஆலோசனை நடத்தினர்.

இந்த நிலையில் சென்னையில் உள்ள கால் சென்டர்களில் பெண்களுக்கு எந்த மாதிரியான பாதுகாப்பு உள்ளது என்பது குறித்துசென்னை மாநகர காவல் துறையும் ஆய்வு செய்து வருகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னையில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனங்கள், கால் சென்டர்கள் உள்ளிட்டவற்றில்பணியாற்றும் ஓட்டுநர்கள், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஓட்டுநர்கள் உள்ளிட்டோரின் புகைப்படங்கள், முகவரிகள்,தொலைபேசி எண்கள், சென்னையில் உள்ள அவர்களது உறவினர்களின் முகவரிகள், சொந்த ஊர் உள்ளிட்ட விவரங்களைசேகரிக்கத் தொடங்கியுள்ளனர்.

மேலும், இரவுப் பணியில் ஈடுபடும் பெண்கள் பாதுகாப்பான முறையில் அவர்களது வீடுகளுக்கு சென்றடைந்தது குறித்துசம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உறுதி செய்து கொள்ளுமாறும் கம்ப்யூட்டர் நிறுவனங்களுக்கு சென்னை காவல்துறைஅறிவுறுத்தியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X