For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவல் நிலையங்களுக்கு புதிய எப்.ஐ.ஆர்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

போலி எப்.ஐ.ஆர். விவகாரத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களுக்கு புதிய வடிவமைப்புடன் கூடியஎப்.ஐ.ஆர். புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் போலி எப்.ஐ.ஆர். புத்தகங்கள் பயன்படுத்தப்பட்டுபோலீசார் கொள்ளையடித்து வந்தது சமீபத்தில் அம்பலமாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தச் சர்ச்சையைத் தொடர்ந்து தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் எப்.ஐ.ஆர். புத்தகங்களுக்குப் பதில் புதிய புத்தகங்களைவழங்க தமிழக உள்துறை உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் காவல் நிலையங்களுக்கு புதிய எப்.ஐ.ஆர்.புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.

முதல் கட்டமாக சென்னை நகர காவல் நிலையங்கள், ரயில்வே காவல் நிலையங்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய புத்தகங்கள் வழங்கப்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

எப்.ஐ.ஆர். புத்தகம் தவிர கேஸ் டைரி உள்ளிட்ட பிற காவல்துறை தொடர்பான புத்தகங்களும் புதிதாக வழங்கப்படும் என்றுதெரிகிறது. புதிதாக வழங்கப்படும் புத்தகங்களையே போலீஸார் இனிமேல் பயன்படுத்த வேண்டும் என்றும்அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X