மகளுக்கு விசா: சிறையில் ராஜீவ் கொலையாளி முருகன் உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜீவ் கொலையாளியான முருகன் தனது மகளுக்கு விசா வழங்கக் கோரி தொடர்ந்து3வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், நளினி ஆகியோரின்மகள் ஹரித்ரா (வயது 15) இலங்கையில் வசித்து வருகிறார். இவர் சிறையில் இருக்கும் தனது பெற்றோர்களை 2 முறை வந்துபார்த்து சென்றுள்ளார்.
இந்த நிலையில் ஹரித்ரா மீண்டும் தனது பெற்றோர்களை பார்க்க ஆசைப்பட்டு விசா கேட்டு விண்ணப்பித்தார். ஆனால்அவருக்கு விசா மறுக்கப்பட்டுவிட்டது. இதையடுத்து தனது மகளுக்கு விசா மறுக்கப்பட்ட தகவல் கிடைத்த முருகன், இதைகண்டித்து வேலூர் சிறையில் நேற்று முன் தினம் உண்ணாவிரத போரட்டம் தொடங்கினார்.
தங்களை தனது மகள் பார்க்க வருவதற்கு விசா வழங்ககோரி தொடர்ந்து சிறையில் 3வது நாளாக அவர் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தி வருகிறார்.












Click it and Unblock the Notifications