லாரி டிரைவர் சயனைட் சாப்பிட்டு தற்கொலை: தீவிரவாதியா? போலீஸ் விசாரணை
கோயம்பத்தூர்:
மேட்டுப்பாளையத்தை சேர்ந்த லாரி டிரைவர் ஒருவரை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்ற போது அவர் சயனைட்சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த குமார் என்பவர் லாரியை விற்க வேண்டி மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கிற்குசென்றுள்ளார். ஆனால் அந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் அவரிடம் லாரி விற்பதற்கான சரியான பத்திரங்கள் இல்லாததால்சந்தேகமடைந்து போலீசில் புகார் கொடுத்தனர்.உடனே சம்பவயிடத்துக்கு விரைந்து வந்த போலீசார் குமாரிடம் விசாரணை செய்வதற்காக காவல் நிலையம் அழைத்து சென்றனர்.அப்போது காவல் நிலையம் செல்லும் வழியில் குமார் தன்னிடம் மறைத்து வைத்திருந்த சயனைட் எடுத்து சாப்பிட்டு தற்கொலைசெய்து கொண்டார்.
குமாரின் இந்த தற்கொலையால், ஒரு லாரி டிரைவரோ அல்லது திருடனோ சயனைட் வைத்திருப்பதற்கு அவசியம் என்ன? என்றுபோலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், குமார் ஏதாவது தீவிரவாத கும்பலுடன் தொடர்புடையவரா என்று விசாரிக்க போலீஸ்தனிப்படை சேலம் மாவட்டத்தில் அவன் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு சென்று விசாரித்தனர். ஆனால் குமார் என்ற பெயரில் பத்துவருடமாக அங்கு யாரும் இல்லை என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.
எனவே இது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications