புயல் நாளை சென்னை-நாகை இடையே கரையைக் கடக்கும்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வங்கக் கடலில் உருவாகியுள்ள மாலா என பெயரிடப்பட்டுள்ள புயல், சென்னைக்கும், நாகைக்கும் இடையே நாளை மாலைகரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய புயலுக்கு மாலா என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புயல் தற்போது நாகைக்கு கிழக்குதென் கிழக்கே 350 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.
இந்தப் புயல் தொடர்ந்து வட மேற்கு திசையில் நகரக் கூடும் எனவும், நாளை மாலை, நாகைக்கும், சென்னைக்கும் இடையேகரையைக் கடக்கக் கூடும் என சென்னை வானிலை ஆராய்ச்சி நிலைய இயக்குநர் எஸ்.ஆர். ரமணன் தெரிவித்துள்ளார்.
புயல் நெருங்கியுள்ளதன் காரணமாக சென்னை, நாகை, கடலூர், புதுவை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் அடுத்த 48 மணிநேரத்திற்கு கன மழையும், மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக் கூடும் என வானிலை ஆராய்ச்சி நிலையம்எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications