தாயாரின் இறுதிச் சடங்கு: வரவில்லை கராத்தே
Subscribe to Oneindia Tamil
திருத்துறைப்பூண்டி:
தலைமறைவாக இருக்கும் சென்னை மாநராட்சி துணை மேயர் கராத்தே தியாகராஜன், தனது தாயாரின் இறுதிச் சடங்குநிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரவில்லை.கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்து வரும் கராத்தே தியாகராஜனின் தாயார் பாலச்சந்திரா, அவரதுசொந்த ஊரான திருத்துறைப்பூண்டியில் சனிக்கிழமை மரணமடைந்தார்.
அவரது இறுதிச் சடங்குகள் இன்று நடைபெற்றன. இதில் கலந்து கொள்ள கராத்தே தியாகராஜன் வரக் கூடும் என்பதால் அவரைக்கைது செய்வதற்காக சென்னை, திருச்சி விமான நிலையங்களிலும், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட இடங்களிலும் போலீஸார்தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
ஆனால் கராத்தே தியாகராஜன் தனது தாயாரின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. இதைத் தொடர்ந்து அவர்இல்லாமலேயே பாலச்சந்திராவின் உடல் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக பாலச்சந்திராவின் உடலுக்கு பல்வேறு கட்சிகளைச்சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தினர்.












Click it and Unblock the Notifications