அமராவதி பாலத்தை அரசே பராமரிக்கும்: ஜெ.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கரூரில் அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு சமீபத்தில் மழை, வெள்ளத்தால் சேதமடைந்துள்ள பாலத்தை அரசேகையகப்படுத்தி சீரமைக்கும் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

கடந்த மாதம் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கரூர் மாவட்டத்தை நான் சென்று பார்த்தேன். அப்போது அமராவதி ஆற்றின்குறுக்கே கடந்த திமுக ஆட்சியின்போது தனியார் நிறுவனத்தால் கட்டப்பட்ட பாலம் சேதமடைந்ததை அறிந்து அதிர்ச்சியுற்றேன்.

கட்டிய 5 வருடங்களிலேயே அந்தப் பாலம் சேதமடைந்துள்ளதால் இதில் முறைகேடுகள் இருக்கலாம் என்ற அடிப்படையில்பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை, ஊரகப் பணித்துறை தலைமைப் பொறியாளர்கள் விசாரணைக்கு உத்தரவிட்டேன்.

அவர்கள் கொடுத்த அறிக்கை அரசுக்கு வந்து அதை தலைமைச் செயலாளர் பரிசீலனை செய்தார். இதன் அடிப்படையில், பாலம்கட்டியதில் பல்வேறு தவறுகள் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. தனியார் நிறுவனம் பாலத்தை முறைப்படி கட்டவில்லைஎன்பது தெரிய வந்துள்ளது.

எனவே பொதுமக்களின் நலன் கருதி அமராவதி ஆற்றுப் பாலத்தை அரசே கையகப்படுத்தி அதை சீரமைக்கும். பாலத்தில் உள்ளகோளாறுகள் முழுமையாக சரி செய்யப்பட்டு பின்னர் போக்குவரத்திற்குத் திறந்து விடப்படும்.

மேலும் தனியார் நிறுவனத்துடன் கரூர் நகராட்சி மேற்கொண்டுள்ள ஒப்பந்தம் ரத்து செய்யப்படும். பொதுமக்களின் நலனைக்கருத்தில் கொண்டு, இனிமேல் அந்தப் பாலத்தில் செல்லும் வாகனங்களுக்கு சுங்க வரி வசூலிக்கப்படாது என்று கூறியுள்ளார்ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+